Home » » குரூப்-1 முதன்மை தேர்வு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைப்பு

குரூப்-1 முதன்மை தேர்வு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைப்பு

குரூப் 1 முதன்மைத் தேர்வு அடுத்த மாதம் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வரும் 27-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தினங்களில் பிற போட்டித் தேர்வுகள் நடைபெறுவதால், குரூப் 1 முதன்மைத் தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் நிலை-4க்கான தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 26 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வு நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

No comments:

Post a Comment

 

Copyright © 2011. Tamilnadu Results - All Rights Reserved

Proudly powered by Blogger