சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பெருமாள் விடுத்துள்ள அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கப்பட்ட, பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான, உத்தேச பதிவு மூப்பு பட்டியல், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இளங்கலை பட்டப்படிப்புடன், பி.எட்., கல்வித்தகுதி பெற்றவர்கள், இன்றைய தேதி வரை தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். பதிவு மூப்புக்குள் உள்ள பதிவுதாரர்கள், 20ம் தேதி மாலைக்குள், தங்களின் பெயர் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின் வரும் மனுதாரரின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
சான்றிதழ் சரிபார்க்கப்படும் மனுதாரர்கள், தங்களின் பழைய மற்றும் ஆன்லைன் வேலைவாய்ப்புப் பதிவு அட்டை, முன்னுரிமை சான்று, கல்வித்தகுதி சான்று, ஜாதிச்சான்று ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் எடுத்து வரவேண்டும்.
பாடப்பிரிவுகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆகியவற்றில், முன்னுரிமை உடைய அனைத்து பிரிவினரும், 2012 மார்ச் 15ம் தேதிக்குள் பதிவுதாரராக இருக்க வேண்டும். கலப்பு மணம் புரிந்தோர், ஆதரவற்ற விதவையர், முன்னாள் ராணுவத்தினர், அரசுக்கு நிலம் வழங்கியோர், தியாகிகளின் வாரிசுகள் ஆகியோர் முன்னுரிமை உடையவர்களாக கருதப்படுவர்.
வேலைவாய்ப்பு பணிகள் அனைத்தும் இலவசம், இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். மேலும், விபரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இளங்கலை பட்டப்படிப்புடன், பி.எட்., கல்வித்தகுதி பெற்றவர்கள், இன்றைய தேதி வரை தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். பதிவு மூப்புக்குள் உள்ள பதிவுதாரர்கள், 20ம் தேதி மாலைக்குள், தங்களின் பெயர் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின் வரும் மனுதாரரின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
சான்றிதழ் சரிபார்க்கப்படும் மனுதாரர்கள், தங்களின் பழைய மற்றும் ஆன்லைன் வேலைவாய்ப்புப் பதிவு அட்டை, முன்னுரிமை சான்று, கல்வித்தகுதி சான்று, ஜாதிச்சான்று ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் எடுத்து வரவேண்டும்.
பாடப்பிரிவுகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆகியவற்றில், முன்னுரிமை உடைய அனைத்து பிரிவினரும், 2012 மார்ச் 15ம் தேதிக்குள் பதிவுதாரராக இருக்க வேண்டும். கலப்பு மணம் புரிந்தோர், ஆதரவற்ற விதவையர், முன்னாள் ராணுவத்தினர், அரசுக்கு நிலம் வழங்கியோர், தியாகிகளின் வாரிசுகள் ஆகியோர் முன்னுரிமை உடையவர்களாக கருதப்படுவர்.
வேலைவாய்ப்பு பணிகள் அனைத்தும் இலவசம், இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். மேலும், விபரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment